உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோவான் 1:9)
இந்த பாடல் “Lead Kindly Light” ஜான் ஹென்றி நியூமன் (1801-1890) என்பவரால் இயற்றப்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் படித்தார் மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலிகன் பாதிரியார் மற்றும் முன்னணி இறையியலாளர் ஆனார். ஜான் நியூமன் ரோம் சென்றபோது நோய்வாய்ப்பட்டார், மேலும் தனது சொந்த இடமான இங்கிலாந்துக்குத் திரும்ப விரும்பினார். ஆனால், அவருக்கு கப்பல் கிடைக்காததால், வர்த்தகக் கப்பலில் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. அவருக்கு 33 வயதாக இருந்தபோது, அவர் சிசிலியன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வீட்டை அடையும் நம்பிக்கையை இழந்தார். அந்த நேரத்தில், அவர் நம்பிக்கையுடன் இந்தப் பாடலை இயற்றினார். கர்த்தரின் ஒளி இருண்ட பாதைகளையும் ஒளிரச் செய்யும் என்ற நம்பிக்கையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த பாடல் வரி கர்த்தரின் ஞானம் மற்றும் அவருடைய நேரத்தின் மீது நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. தன்னைப் பத்திரமாக வழிநடத்தும்படி கர்த்தரிடம் மன்றாடி இந்தப் பாடலை 16.6.1833 இல் எழுதினார். ஒரு நாளில் மூன்று சரணங்களை இயற்றி முடித்து, “மேகத் தூண்” என்று தலைப்பு கொடுத்தார். முதல் சரணம் அவரது உதவியற்ற நிலையை விவரிக்கிறது. இரண்டாவது சரணம் அவரது ஆரம்பகால வாழ்க்கையை விவரிக்கிறது. கடைசி இரண்டு வரிகள் அவரது நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற வாஞ்சையை வெளிப்படுத்துகிறது! “மேகத்தூண்” வழியாக இஸ்ரவேலர்களை வழிநடத்திய ஆண்டவர், தனது பயணத்தில் தன்னைப் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். அவர் இங்கிலாந்தை சுகத்துடன் அடைந்து, மிகுந்த ஆர்வத்துடன் தனது ஊழியத்தைத் தொடர்ந்தார்.
” காரிருளில், என் நேச தீபமே,
நடத்துமேன்;
வேறொளியில்லை, வீடும் தூரமே,
நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்”. -ஆமென்.
You must be logged in to post a comment.